Tuesday, March 18, 2008

இதுக்கு என்னாங்கோ பரிகாரம்?

இரவு முழுவதும் கோவில் கருவறைக்குள் காதலியுடன் இருந்த பூசாரி; விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்

திருவனந்தபுரம், மார்ச். 8-

கேரளா மாநிலம் பத்தனம் திட்டையை சேர்ந்தவர் சுபாஷ் நம்பூதிரி. (வயது 41). இவர் கோன்னி அருகே வள்ளிகோடு பகவதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார்.

கோவிலுக்கு அருகே அஞ்சலி என்ற பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். பூசாரி சுபாஷ் நம்பூதிரி கோவிலுக்கு வரும் போதெல்லாம் இவரை பார்ப்பார். கண்களால் பேசிக்கொண்ட அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கோவிலில் வழிபாடுகள் இல்லாத நேரத்தில் சுபாஷூம் அஞ்சலியும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இதற்கு கோவிலின் மறைவான இடங்களை பயன்படுத்தி கொண்டனர்.

பூசாரி சுபாஷ்-அஞ்சலி இடையேயான காதல் விவகாரம் மெல்ல மெல்ல ஊருக்கு தெரிந்து பெற்றோர் காதுக்கும் எட்டியது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். மேலும் அஞ்சலியை கோவிலுக்கு செல்லக்கூடாது. பூசாரியை சந்திக்கக்கூடாது என்றும் சத்தம் போட்டனர்.

இதனால் தவித்துப்போன காதல் ஜோடி திடீரென ஊரை விட்டு மாயமானது. அதிர்ந்து போன பெற்றோர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி பெங்களூருக்கு சென்றது தெரிய வந்தது. எனவே போலீசார் பெங்களூர் சென்று அவர்களை கண்டு பிடித்து அழைத்து வரமுடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கோவில் ஊழி யர்கள் கோவிலை திறந்தனர். பின்னர் சன்னிதானத்துக்குள் சென்று கருவறையையும் திறந்தனர். அப்போது கருவறைக்குள் பூசாரி சுபாஷூம் அவரது காதலி அஞ்சலியும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தப்படி மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த காதல் ஜோடியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் பூசாரி சுபாஷூம் காதலி அஞ்சலியும் முந்தினநாள் இரவே பெங்களூரில் இருந்து ஊருக்கு வந்து விட்டதும், பின்பு அவர்கள் நைசாக கோவில் கருவறைக்குள் புகுந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

கருவறைக்குள் காதல் ஜோடி கட்டிப்பிடித்தப்படி கிடந்தது கோன்னி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=255173

======

ஐயப்பன் கோவிலுக்கு நடிகை சென்றால் தீட்டு.. சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடினால் தீட்டு.. என்கிறார்களே, இப்போ கோவில் கருவறைக்குள்ளேயே தீட்டு பட்டதற்கு என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள்?

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குருக்கள் செய்தால் குற்றமில்லை இல்லியோ!!!!

உண்மை உடையான் said...

யோகன்,

குருக்கள், மடாதிபதி, சாமியார், பார்ப்பனர் இவங்கள் செய்வதெல்லாம் குற்றமே இல்லை. மேல் விபரங்களுக்கு எனது இந்த பதிவை பார்க்கவும்: மத்தவங்களுக்கு உயிர், பார்ப்பனென்றால் ம**! இதுதான் மனுதர்மம்!