Tuesday, July 22, 2008

கொள்கை இல்லாக் கூட்டத்தார்!

தமக்கென தெளிவான ஒரு கொள்கையும், அக்கொள்கையில் உறுதியான பிடிப்பும் உள்ளவர்கள், தம் கொள்கையைப் பற்றி பெருமையாகப் பேசவோ, அதைப் பற்றி விளக்கம் கொடுக்கவோ தயங்குவதில்லை!

ஆனால், தமக்கென எந்த ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், அல்லது வெளியில் சொல்ல முடியாத கொள்கைகளைக் கொண்டவர்கள், பிறரின் கொள்கைகளை குறை சொல்வதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாம் மத இணைய தளங்களில் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. தமிழில் கூட இதுபோல நிறைய இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் இஸ்லாம் மதம் பற்றிய மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கிருஸ்துவ மதம் பற்றி இப்படிப்பட்ட இணைய தளங்கள் தமிழில் இல்லையே தவிர ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

ஆனால், இதுப்போன்ற வசதி பார்ப்பன ஹிந்துத்துவ கொள்கைகளைப் பற்றி மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த பார்ப்பன மனுதர்ம கொள்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஆனால் இணையங்களில் பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கிருஸ்துவ பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு கிருஸ்துவ மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இந்த இரு மதத்தினரும் சண்டை போட்டுக் கொள்வதை தாம் பார்த்து ஆனந்தமடைய வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கமே இதன் காரணம். மேலும் பார்ப்பனர்கள் புனைப்பெயர்களின் பின்னே ஒழிந்து கொண்டு பெரியாரை திட்டுகிறார்கள். ஆபாச கதைகளை எழுதி பதிவேற்றுகிறார்கள். மாட்டிக் கொண்டால் காலில் விழாத குறையாக கெஞ்சி கேவலப்பட்டுப் போகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் செய்வது போல தமது பார்ப்பன மதத்தின் கொள்கைகளை விளக்கி இவர்கள் இணையத்தில் எழுத மாட்டார்கள். அந்த கொள்கைகளைப் பற்றி கேள்விகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்ன?

ஏன் இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் போல பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? பார்ப்பன மனுசாஸ்திர கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளனவா? பார்ப்பன கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? பார்ப்பனர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடதுவதில்லை என்றாலும் மாற்று மதத்தவர்கள் கேட்கும் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் கேள்வி பதில் வசதி செய்து பதில் கொடுக்கும்போது, ஏன் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். பார்ப்பன சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.

பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தாததற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6. இன்று உலகில் நிலவும் சமூக அவலங்களுள் மிக அசிங்கமானவை சாதிப் பிரிவினையும் தீண்டாமைக் கொடுமையுமே. இவ்விரண்டிற்கும் ஆணி வேராக இருப்பது பார்ப்பனர்களின் மனுசாஸ்திர கொள்கைகளே. முழு உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும் பார்ப்பனர்கள் சாதிப்பிரிவினையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிப்பிரிவினை என்ற இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டார்கள்தான். ஆனால் அவர்களெல்லாம் பபர்ப்பனர்களல்ல. சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று உண்மையாய் பாடுபட்ட ஒரு பார்ப்பனரையாவது காட்ட முடியுமா? பாரதியார் கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாப்பாவைப் பார்த்து பொய்தான் சொன்னார். பார்ப்பன சமுதாயமே நால்வர்ண சாதிப்பிரிவினையின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்டதுதான். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் பார்ப்பனர்களுக்கு இல்லாததால் தமது கொள்கைகளைப் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தவே மாட்டார்கள்.

காரணம் 5. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பவை பார்ப்பன வேதங்களே. மனுசாஸ்திரம் பெண்களை ஒரு கேவலமான பிறவிகளாக சித்தரிக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தி வருபவர்கள் பார்ப்பனர்கள். கோவிலுக்கு பொட்டு கட்டுதல், தேவதாசி முறை போன்ற பெயர்களில் பெண்களை போகப்பொருளாக நடத்தியவர்கள் இவர்கள். கேள்வி பதில் என்று வந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும். அங்கு கேள்விகளைக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைவாதிகளுக்கு பார்ப்பனர்களால் பதில் சொல்லி மாளாது. எனவே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 4. பார்ப்பனர்கள் அக்கால அரசர்களை மூளைச் சலவை செய்து பொன்னையும் பொருளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஈனச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது பார்ப்பனர்கள் வேதங்களை கற்றவர்கள் என்ற ஒரு தகுதி மட்டுமே. மங்கலம்' என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு 'மங்கலம்', 'அகரம்' என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும். இதற்கு போட்டியாக மற்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேதத்தை படிக்கும் மற்றவர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் அச்சுறுத்தி வைத்திருந்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் பார்ப்பனர்கலின் இந்த ஈனச்செயல்களெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதனால் பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 3. பார்ப்பனர்களின் வேதங்களும் சட்டங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுகூலமானவை. "அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)" என்று சொல்கிறது மனுசாஸ்திரம். இது போன்ற, எண்ணற்ற, பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டதுதான் பார்பனர்களின் வேதங்கள். இதுபோன்ற சட்டங்களை இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்களால் எவ்வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது. கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவை பற்றி கேள்வி வந்தால் பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

காரணம் 2. மேலும் பார்ப்பனர்களின் மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனர்கள் என்ன குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே விதிக்கப்பட வேண்டும். அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு வேறு மாதிரியான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)

பார்ப்பான்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லும் மனுசாஸ்திரம் மற்றவர்களுக்கு பாரபட்சமான தண்டனைகளை வழங்குகிறது. இதற்கெல்லாம் பார்ப்பனர்களால் ஒருக்காலும் பதில் சொல்லவே முடியாது. அதனாலேயெ பார்ப்பனர்கள் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தாமல் ஒளிந்து கொள்கிறார்கள்.

காரணம் 1. கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அவரவர்கள் மதம் சிறந்தது என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை தழுவினால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் மற்ற மதத்தினருக்கு தங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவர்கள் தங்கள் மதத்தை தழுவும்படி அழைக்கிறார்கள். இது மற்ற மதத்தினர் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் தங்கள் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியோ பிறப்பினால் வருவது. வேறு மதத்தை சேர்ந்தவர்களல்ல, வேறு சாதியை சேர்ந்த இந்து கூட பார்ப்பனராக சாதி மாற முடியாது. அதனால் தங்கள் சாதியின் (இல்லாத) அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு இல்லை. தவிரவும் பார்ப்பனர்கள் மற்றவர்கலை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இந்த உண்மையை எப்படி கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் விளக்குவார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

கட்டுரை முற்றிற்று

உமரும் அனானிமசும் (பகுதி – 1)

அறிமுகம்

உமர்! இந்தப் பெயரைக் கேட்டாலே அன்றைய அரசாட்சிகள் நடுங்கின! யார் இந்த உமர்? இஸ்லாம் என்ற ஒளியின் மூலம் உயர்வை அடைந்தவர். உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்றும், உமர் ஒரு வழியாகச் சென்றால் ஷைத்தான் தன் பாதையை மாற்றிக் கொள்கிறான் என்றும் நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டவர். அல்லாஹ்வே! அம்ரு பின் ஹிஷாம் உமர் பின் கத்தாப் ஆகியவரில் உனக்குப் பிடித்தமானவரைக் கொண்டு இஸ்லாத்தை கண்ணியப் படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உமர் இஸ்லாத்தைத் தழுவினார். எப்படி? குர்ஆன்! ஆம்! அது தான் உமரின் உள்ளத்தை மாற்றியது. முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய சபதமேற்றுச் சென்றவரின் உள்ளம் எப்படி மாறிவிட்டது? அவர்கள் செவிமடுத்த குர்ஆன் வசனம் தான் அவரை மாற்றியது. தன் சகோதரியின் கைகளில் காணப்பட்ட குர்ஆன் ஏட்டை வாங்கிப் படித்த உமரின் கண்களில் பின் வரும் இறை வசனங்கள் தென்படுகிறது.

தாஹா.(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (தாஹா : 1-8)

இந்த உமர் தான் பிற்காலத்தில் மிகப் பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட இரண்டாம் கலீஃபா. இவரது கையில் தான் அன்று எருசலேம் தனது அரசாட்சியின் திறவுகோலை ஒப்படைத்தது. இந்த உமரைப் பற்றித்தான் இந்தியாவில் உமரின் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சி அமைய விரும்புகிறேன் என்று காந்தியடிகள் கூறினார். இன்றும் பல கோடி முஸ்லிம்களால் அமீருல் முஃமினீன் என்று போற்றப்படுபவரே இந்த உமர்! இந்த மகா புருஷரின் நினைவாகவே இன்று முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உமர் என்று பெயர் சூட்டுகின்றனர்.

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலைகுறைந்த தந்திரம் இது. முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர்.

கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்
by அபூ அப்திர்ரஹ்மான்
http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html