Showing posts with label பைபிள். Show all posts
Showing posts with label பைபிள். Show all posts

Tuesday, July 22, 2008

உமரும் அனானிமசும் (பகுதி – 1)

அறிமுகம்

உமர்! இந்தப் பெயரைக் கேட்டாலே அன்றைய அரசாட்சிகள் நடுங்கின! யார் இந்த உமர்? இஸ்லாம் என்ற ஒளியின் மூலம் உயர்வை அடைந்தவர். உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்றும், உமர் ஒரு வழியாகச் சென்றால் ஷைத்தான் தன் பாதையை மாற்றிக் கொள்கிறான் என்றும் நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டவர். அல்லாஹ்வே! அம்ரு பின் ஹிஷாம் உமர் பின் கத்தாப் ஆகியவரில் உனக்குப் பிடித்தமானவரைக் கொண்டு இஸ்லாத்தை கண்ணியப் படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உமர் இஸ்லாத்தைத் தழுவினார். எப்படி? குர்ஆன்! ஆம்! அது தான் உமரின் உள்ளத்தை மாற்றியது. முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய சபதமேற்றுச் சென்றவரின் உள்ளம் எப்படி மாறிவிட்டது? அவர்கள் செவிமடுத்த குர்ஆன் வசனம் தான் அவரை மாற்றியது. தன் சகோதரியின் கைகளில் காணப்பட்ட குர்ஆன் ஏட்டை வாங்கிப் படித்த உமரின் கண்களில் பின் வரும் இறை வசனங்கள் தென்படுகிறது.

தாஹா.(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (தாஹா : 1-8)

இந்த உமர் தான் பிற்காலத்தில் மிகப் பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட இரண்டாம் கலீஃபா. இவரது கையில் தான் அன்று எருசலேம் தனது அரசாட்சியின் திறவுகோலை ஒப்படைத்தது. இந்த உமரைப் பற்றித்தான் இந்தியாவில் உமரின் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சி அமைய விரும்புகிறேன் என்று காந்தியடிகள் கூறினார். இன்றும் பல கோடி முஸ்லிம்களால் அமீருல் முஃமினீன் என்று போற்றப்படுபவரே இந்த உமர்! இந்த மகா புருஷரின் நினைவாகவே இன்று முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உமர் என்று பெயர் சூட்டுகின்றனர்.

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலைகுறைந்த தந்திரம் இது. முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர்.

கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்
by அபூ அப்திர்ரஹ்மான்
http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html