Tuesday, July 22, 2008

கொள்கை இல்லாக் கூட்டத்தார்!

தமக்கென தெளிவான ஒரு கொள்கையும், அக்கொள்கையில் உறுதியான பிடிப்பும் உள்ளவர்கள், தம் கொள்கையைப் பற்றி பெருமையாகப் பேசவோ, அதைப் பற்றி விளக்கம் கொடுக்கவோ தயங்குவதில்லை!

ஆனால், தமக்கென எந்த ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், அல்லது வெளியில் சொல்ல முடியாத கொள்கைகளைக் கொண்டவர்கள், பிறரின் கொள்கைகளை குறை சொல்வதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாம் மத இணைய தளங்களில் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. தமிழில் கூட இதுபோல நிறைய இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் இஸ்லாம் மதம் பற்றிய மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கிருஸ்துவ மதம் பற்றி இப்படிப்பட்ட இணைய தளங்கள் தமிழில் இல்லையே தவிர ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

ஆனால், இதுப்போன்ற வசதி பார்ப்பன ஹிந்துத்துவ கொள்கைகளைப் பற்றி மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த பார்ப்பன மனுதர்ம கொள்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஆனால் இணையங்களில் பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கிருஸ்துவ பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு கிருஸ்துவ மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இந்த இரு மதத்தினரும் சண்டை போட்டுக் கொள்வதை தாம் பார்த்து ஆனந்தமடைய வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கமே இதன் காரணம். மேலும் பார்ப்பனர்கள் புனைப்பெயர்களின் பின்னே ஒழிந்து கொண்டு பெரியாரை திட்டுகிறார்கள். ஆபாச கதைகளை எழுதி பதிவேற்றுகிறார்கள். மாட்டிக் கொண்டால் காலில் விழாத குறையாக கெஞ்சி கேவலப்பட்டுப் போகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் செய்வது போல தமது பார்ப்பன மதத்தின் கொள்கைகளை விளக்கி இவர்கள் இணையத்தில் எழுத மாட்டார்கள். அந்த கொள்கைகளைப் பற்றி கேள்விகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்ன?

ஏன் இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் போல பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? பார்ப்பன மனுசாஸ்திர கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளனவா? பார்ப்பன கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? பார்ப்பனர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடதுவதில்லை என்றாலும் மாற்று மதத்தவர்கள் கேட்கும் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் கேள்வி பதில் வசதி செய்து பதில் கொடுக்கும்போது, ஏன் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். பார்ப்பன சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.

பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தாததற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6. இன்று உலகில் நிலவும் சமூக அவலங்களுள் மிக அசிங்கமானவை சாதிப் பிரிவினையும் தீண்டாமைக் கொடுமையுமே. இவ்விரண்டிற்கும் ஆணி வேராக இருப்பது பார்ப்பனர்களின் மனுசாஸ்திர கொள்கைகளே. முழு உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும் பார்ப்பனர்கள் சாதிப்பிரிவினையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிப்பிரிவினை என்ற இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டார்கள்தான். ஆனால் அவர்களெல்லாம் பபர்ப்பனர்களல்ல. சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று உண்மையாய் பாடுபட்ட ஒரு பார்ப்பனரையாவது காட்ட முடியுமா? பாரதியார் கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாப்பாவைப் பார்த்து பொய்தான் சொன்னார். பார்ப்பன சமுதாயமே நால்வர்ண சாதிப்பிரிவினையின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்டதுதான். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் பார்ப்பனர்களுக்கு இல்லாததால் தமது கொள்கைகளைப் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தவே மாட்டார்கள்.

காரணம் 5. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பவை பார்ப்பன வேதங்களே. மனுசாஸ்திரம் பெண்களை ஒரு கேவலமான பிறவிகளாக சித்தரிக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தி வருபவர்கள் பார்ப்பனர்கள். கோவிலுக்கு பொட்டு கட்டுதல், தேவதாசி முறை போன்ற பெயர்களில் பெண்களை போகப்பொருளாக நடத்தியவர்கள் இவர்கள். கேள்வி பதில் என்று வந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும். அங்கு கேள்விகளைக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைவாதிகளுக்கு பார்ப்பனர்களால் பதில் சொல்லி மாளாது. எனவே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 4. பார்ப்பனர்கள் அக்கால அரசர்களை மூளைச் சலவை செய்து பொன்னையும் பொருளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஈனச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது பார்ப்பனர்கள் வேதங்களை கற்றவர்கள் என்ற ஒரு தகுதி மட்டுமே. மங்கலம்' என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு 'மங்கலம்', 'அகரம்' என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும். இதற்கு போட்டியாக மற்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேதத்தை படிக்கும் மற்றவர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் அச்சுறுத்தி வைத்திருந்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் பார்ப்பனர்கலின் இந்த ஈனச்செயல்களெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதனால் பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 3. பார்ப்பனர்களின் வேதங்களும் சட்டங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுகூலமானவை. "அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)" என்று சொல்கிறது மனுசாஸ்திரம். இது போன்ற, எண்ணற்ற, பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டதுதான் பார்பனர்களின் வேதங்கள். இதுபோன்ற சட்டங்களை இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்களால் எவ்வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது. கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவை பற்றி கேள்வி வந்தால் பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

காரணம் 2. மேலும் பார்ப்பனர்களின் மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனர்கள் என்ன குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே விதிக்கப்பட வேண்டும். அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு வேறு மாதிரியான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)

பார்ப்பான்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லும் மனுசாஸ்திரம் மற்றவர்களுக்கு பாரபட்சமான தண்டனைகளை வழங்குகிறது. இதற்கெல்லாம் பார்ப்பனர்களால் ஒருக்காலும் பதில் சொல்லவே முடியாது. அதனாலேயெ பார்ப்பனர்கள் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தாமல் ஒளிந்து கொள்கிறார்கள்.

காரணம் 1. கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அவரவர்கள் மதம் சிறந்தது என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை தழுவினால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் மற்ற மதத்தினருக்கு தங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவர்கள் தங்கள் மதத்தை தழுவும்படி அழைக்கிறார்கள். இது மற்ற மதத்தினர் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் தங்கள் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியோ பிறப்பினால் வருவது. வேறு மதத்தை சேர்ந்தவர்களல்ல, வேறு சாதியை சேர்ந்த இந்து கூட பார்ப்பனராக சாதி மாற முடியாது. அதனால் தங்கள் சாதியின் (இல்லாத) அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு இல்லை. தவிரவும் பார்ப்பனர்கள் மற்றவர்கலை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இந்த உண்மையை எப்படி கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் விளக்குவார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

கட்டுரை முற்றிற்று

உமரும் அனானிமசும் (பகுதி – 1)

அறிமுகம்

உமர்! இந்தப் பெயரைக் கேட்டாலே அன்றைய அரசாட்சிகள் நடுங்கின! யார் இந்த உமர்? இஸ்லாம் என்ற ஒளியின் மூலம் உயர்வை அடைந்தவர். உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்றும், உமர் ஒரு வழியாகச் சென்றால் ஷைத்தான் தன் பாதையை மாற்றிக் கொள்கிறான் என்றும் நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டவர். அல்லாஹ்வே! அம்ரு பின் ஹிஷாம் உமர் பின் கத்தாப் ஆகியவரில் உனக்குப் பிடித்தமானவரைக் கொண்டு இஸ்லாத்தை கண்ணியப் படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உமர் இஸ்லாத்தைத் தழுவினார். எப்படி? குர்ஆன்! ஆம்! அது தான் உமரின் உள்ளத்தை மாற்றியது. முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய சபதமேற்றுச் சென்றவரின் உள்ளம் எப்படி மாறிவிட்டது? அவர்கள் செவிமடுத்த குர்ஆன் வசனம் தான் அவரை மாற்றியது. தன் சகோதரியின் கைகளில் காணப்பட்ட குர்ஆன் ஏட்டை வாங்கிப் படித்த உமரின் கண்களில் பின் வரும் இறை வசனங்கள் தென்படுகிறது.

தாஹா.(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (தாஹா : 1-8)

இந்த உமர் தான் பிற்காலத்தில் மிகப் பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட இரண்டாம் கலீஃபா. இவரது கையில் தான் அன்று எருசலேம் தனது அரசாட்சியின் திறவுகோலை ஒப்படைத்தது. இந்த உமரைப் பற்றித்தான் இந்தியாவில் உமரின் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சி அமைய விரும்புகிறேன் என்று காந்தியடிகள் கூறினார். இன்றும் பல கோடி முஸ்லிம்களால் அமீருல் முஃமினீன் என்று போற்றப்படுபவரே இந்த உமர்! இந்த மகா புருஷரின் நினைவாகவே இன்று முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உமர் என்று பெயர் சூட்டுகின்றனர்.

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலைகுறைந்த தந்திரம் இது. முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர்.

கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்
by அபூ அப்திர்ரஹ்மான்
http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

Saturday, May 31, 2008

மகர ஜோதி மனித செயலா?

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலைமுகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது அல்ல என்றும், அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்றும் சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு கூறியதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

சபரிமலைக்கு ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜையின்போது, தென் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வரும் அவர்கள், ஜனவரி 14-ம் தேதி மாலை ஐயப்பனுக்கு கற்பூர ஆரத்தியுடன் பூஜை நடைபெறும்போது, பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி, ஐயப்பனே அங்கு தோன்றி காட்சியளிப்பதாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மகர விளக்கு வேறு, மகர ஜோதி வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், மகர விளக்கு என்பது புராண காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும்.

மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மகர விளக்கும் மகர ஜோதியும் ஒன்று என நினைக்கும் சிலரது தவறான கருத்துக் காரணமாக இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது இது தேவையில்லாதது என்று அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், மகர விளக்கு தீபம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

நன்றி. பிபிசி

Monday, May 26, 2008

மரம் வெட்டினால் இந்து(த்துவா)க்களின் மனது புண்படும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சேதுக்கால்வாய் பகுதியில் ராமர் பாலம் இருந்தது என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை என்றும், நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்றும் இந்துத்துவ பாஜக-அதிமுக பரிவாரங்கள் கூக்குரலிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்துக் கருத்துச் சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி மநுதாரரிடம் "மரம் கூடத்தான் சிலரால் வணங்கப்படுகிறது. அதனை தெய்வம் என்றும்கூட நம்புகிறார்கள். அதற்காக இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதால் யாரும் மரம் வெட்டக்கூடாது என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டார். இப்படியே மதநம்பிக்கை தும்பிக்கை என்று சொல்லிக் கொண்டே கீழ்கண்டவற்றையும் தடுக்க வாய்ப்புள்ளது.

1) விநாயகரின் வாகனம் எலி என்பதால் யாரும் எலிகளைக் கொல்லக் கூடாது;
எலி மருந்து விற்பதையும் தடை செய்ய வேண்டும்.


2) விஷ்னுவின் வாகனம் பன்றி என்பதால் மூளைக்காய்ச்சல் பன்றியினால்
பரவும் என்று சொல்வதையும் தடை செய்ய வேண்டும்.


3) சிவனின் செல்லப்பிராணி பாம்பு; இனி யாரும் பாம்பை
அடிக்கக்கூடாது.



இப்படியாக கல்,மரம்,ஊர்வன,பறப்பன போக கம்பி எண்ணிய/ எண்ணப் போகும் பலரையும் தெய்வமாக நம்புவதால் அவர்களை சிறையில் அடைப்பதும், குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்வதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்பதால் சங்கரராமனைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக நடமாடும் தெய்வம் சங்கராச்சாரியாரை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்து மதநல்லிணக்கம் கெடாமல் காக்க வேண்டும்!

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்"
- பாரதியார்

Monday, May 12, 2008

திராவிட நாகரிகம் வேறு! ஆரியர் வாழ்க்கை முறை வேறு!

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் அவர்கள் 8-2-08 தேதிய தினமணி இதழில் இந்தியப் பண்பாடு பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் தலைப்பே சாரே ஜஹான்ஸே அச்சா . . . என்பதாகும். உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் சிறந்தது எங்கள் இந்துஸ்தான்(!) என்பது அந்தப் பாடலின் முதல் வரி.

உலகில் சிறந்த நாட்டை ஏன் இஸ்லாமியர்கள் படையெடுத்து அடிமைப்படுத்தினார்கள்? எப்படி இஸ்லாமியர்களால் இந்த நாட்டை 700 ஆண்டுகள் ஆள முடிந்தது? இந்தியாவை வெற்றி கொண்ட மொகலாயர்களால் துறவியர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆலயங் கள் தகர்க்கப்பட்டன என்று எழுதுகிறார். இக்கொடுமைகளை ஏன் இந்துக் கடவுள்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சோமநாதபுரம் கோயிலைப் பதினெட்டு முறை கஜினி முகமது படையெடுத்து அதன் விக்கிரகங்கள், செல்வங்களைக் கொள் ளையடித்துச் சென்றானே. ஏன் கோயிலில் வீற்றிருக்கும் ஆண்டவனால் கஜனியை அழிக்க முடியவில்லை?

இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாந்தரைப் பற்றி பெங்களூரில் ஒரு நாடகத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பார்த்தாராம். இந்திய நாட்டுப் பண்பாட்டுச் சின்னங்களான ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, கண்ணனை நினைவூட்டும் புல்லாங்குழல் ஆகியவற்றை அலெக்சாந்தருக்குக் கொடுத்து அவற்றை விளக்கினார்களாம்!

ராமாயணமும், மகாபாரதமும் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகள் அல்ல; அவை பஞ்ச சந்திரம், அரேபியன் இரவுகள் போன்ற கற்பனைக் கதைகள் என்று பண்டித நேரு தாம் எழுதிய நான் கண்ட இந்தியா என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதாகக் கூறும் கற்பனைக் கதைகள் என்று நேரு கூறுகிறார்.

தசரதன் அறுபதாயிரம் மனைவியர்களைக் கொண்டிருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது. அது தமிழர் பண்பாடா?

சம்பூகன் என்ற சூத்திரன் தன் குலத் தொழிலுக்கு மாறாகத் தவம் செய்ததால், என் மகன் இறந்து விட்டான் என்று ஒரு பார்ப்பான் ராமனிடம் முறை யிட்டானாம். ராமன் உடனே சம்பூகன் தலையை வெட்டி விட் டானாம். பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டானாம்! இதுதான் கணேசன் புகழ்ந்து கூறும் பாரதப் பண்பாடா?

அய்ந்து சகோதரர்களுக்கு மனைவியாக இருந்த திரவுபதி எப்படி பத்தினியாக முடியும்? என்று தந்தை பெரியார் கேட்டாரே அதற்குப் பாரதீய ஜனதா கட்சி என்ன பதில் அளிக்கமுடியும்?

சிறியவனாக இருந்த போது வெண்ணெய் திருடி - பெரியவன் ஆனபோது பெண்கள் குளிக்கும்போது அவர்கள் சேலைகளைத் திருடியவனா நமது கடவுள் என்று அறிஞர் அண்ணா கேள்வி கேட்டாரே? அதற்கு இந்து மதவாதிகளின் பதில் என்ன?

பகவத் கீதையில் கண்ணன், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகை வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கூறுகிறான். இந்த நால்வகை வர்ணங்கள் தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மனித சமத்துவத்தைப் பாடினார்.

இந்தியாவை வெற்றி கொள்ள என்ன தந்திரம் கையாள வேண்டும் என்று மெக்காலே 1835 பிப்ரவலி 2 ஆம் நாள் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திட்டம் ஒன்று வைத்தாராம். இந்தியா முழுதும் மெக்காலே பயணம் செய்தாராம். ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ இந்தியாவில் அவரால் பார்க்க முடிய வில்லையாம்!

மெக்காலே இந்தியாவில் பெருநகரங்களின் மூலை முடுக்களெல்லாம் சுற்றிப் பார்த்தவரா? இன்று அமெரிக்கா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளிலே கூட திருடர்கள் இருக்கிறார்கள் என்றால் அக்கால இந்தியாவில் கேட்க வேண்டுமா? அக்காலத்தில் கள்வர்கள் இருந்த காரணத்தால்தான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் கள்ளாமை என்ற அதிகாரத்தையே வைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

என்று எச்சரித்திருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் இருபது கோடி மக்கள் ஒரு வேளைக்குத் தான் உணவு பெற முடிகிறது என்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கூறுகிறார். மெக்காலே பயணம் செய்த காலத்தில் பசிக் கொடுமையும், பிச்சை எடுத்தலும் இல்லாமலா இருந்திருக்கும்?

இந்தியாவின் தொன்மையான கல்வி முறை, கலாசாரத்தை அழிக்காமல் நாம் இந்தியாவை முழுவதும் வெற்றி கொள்ள முடியாது என்று மெக்காலே அறிக்கை வைத்தாராம். இந்தியாவின் கல்வி முறை என்பது பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்தது அல்லவா? சூத்திர மக்கள் கல்வி கற்கக்கூடாது என்ற மனுதர்ம முறை அல்லவா இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது!

டி.நோபிலி என்ற வெளிநாட்டுப் பாதிரியார் 1610 ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்திருக்கிறார். மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில், கல்வி கற்று வந்த பத்தாயிரம் மாணவர்களும் பார்ப்பனராகவே இருந்ததாக நோபிலி தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்! இந்த மனுதர்ம முறையை விட ஆங்கிலேயரின் கல்வி முறை எவ்வளவோ சமத்துவத் தன்மை கொண்டதாகும்.

தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் 12-1-2008 அன்று லயோலா கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவில் கிறித்தவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வியைப் பரப்புவதில் சிறப்பான தொண்டு ஆற்றி இருக்கின்றனர் என்று புகழ்ந்திருக்கிறார். (விடுதலை 4-2-08).

1901 இல் தமிழர்களில் படித்தோர் தொகை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை மெக்காலே கல்வி முறை அழித்துவிட்டது என்று கணேசன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுவதைப் பகுத்தறிவு வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இமயம் முதல் குமரி வரை இதை ஒரே நாடாக, ஒரே தேசமாக இந்தப் பண்பாடுதான் ஆக்கியிருக்கிறது என்று மிகப் பெரிய பொய்யை கணேசன் கூறியிருக்கிறார். பல்வேறு சிறு நாடுகளாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் தங்கள் படைவலிமையால் ஒரே நாடாக ஆக்கினார்கள்.

சென்ற ஜனவரி மாதம் சென்னையில் கூடிய பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது; அது நமது கலாசாரத்தைக் கெடுத்துவிடும் என்று பேசியிருக்கிறர்கள். பார்ப்பனர் கலாச்சாரம் வேறு; தமிழர்களின் நாகரிகம், பண்பாடு வேறு. தமிழர் களின் நாகரிகத்தை நாம் எதிர்காலத்திலும் போற்றிக் காப்பாற்ற வேண்டும்.

நன்றி - விடுதலை

Sunday, May 11, 2008

இந்து மதத்தை ஒழிப்பதுதான் ஒரே வழி: புனிதபாண்டியன்

தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 12 வருடங்களாக ஊடக தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘தலித் முரசு’ தன் பாதை மாறாமல் தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர். ‘கீற்று’ இணையதளத்திற்காக அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..

மாணவர்களிடையே ஈழப் பிரச்சினையின் தாக்கம்:

"...பொதுவாக சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நான் மாணவராக இருந்ததில் இருந்து, இதுவரை அப்படி எந்த மாணவர் குழுக்களும் சமூக மாற்றத்திற்காக இங்கே போராடி வெகுண்டெழுந்ததாக நான் பார்த்ததில்லை. வகுப்பை மட்டம் போடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே மாணவர்கள் இங்கே போராட்டங்களைப் பார்த்தார்கள். இதே நிலைமைதான் அப்பொழுதும் ஈழப்போராட்டத்திற்கும் இருந்தது. என் கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். திராவிட கழகங்கள், சில அமைப்புகள் பிரச்சினைகளை முன்வைப்பார்கள். அதிலுள்ள மாணவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கமாட்டார்கள்...."

தலித் அரசியல்:

"...தமிழக சட்டப்பேரவையில் தற்போது 42 தலித் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்பிறகும், ‘தலித்துகள் அரசியல் சக்தியாக மாறும்போது தான் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று திருமாவளவன் கூறுகிறார். தலித்துகள் முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வகித்தாலும் திருமாவளவன் இதையே தான் கூறுவார். அப்படியானால் அவர் முதல்வராக ஆக வேண்டும். அவர் முதல்வராக ஆக முடியுமா? அப்படியே ஆனாலும் தலித் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசிக்க வேண்டும். இதற்கெல்லாம் பதில் இல்லாதபோது, தலித் அரசியல் என்பதில் போய் ஏன் விழவேண்டும்? ..."

மதமாற்றமும் தலித் முன்னேற்றமும்:

"...தலித்துகள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு நிலம் அவசியம் என்பதால் தான் நிலப்பங்கீட்டை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கயர்லாஞ்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நில உடைமையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் நிலப்பங்கீடு தவறு என்று சொல்லிவிட முடியாது. தலித் கிறிஸ்தவன் தலித் இந்துவை விட மிகமிகக் குறைந்த அளவிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது முதல் வழி. அதன்பிறகு இழிவை நீக்குவது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்..."

இந்து மதத்தில் பெண்கள்!

"...ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என இந்து மதம் போல வேறு எந்த மதமும் பெண்களை அடக்கி ஒடுக்கியதில்லை. இந்து மதத்தை எந்த மதத்தோடும் ஒப்பிடவே முடியாது. இந்து மதம் ஒரு மதமே அல்ல என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது..."

அம்பேத்கர் தலித் தலைவரா?

"...ஒரு பார்ப்பனர் டாக்டராக இருந்தால் இந்த சமூகம் அவரை ஒரு மிகப்பெரிய டாக்டர் என்று குறிப்பிடுகிறது. ஒரு கவிஞர் பார்ப்பனராக இருந்தால் அவரை தேசியக் கவி என்று கொண்டாடுகிறது. பாரதிதாசன் பார்ப்பனர் அல்லாத காரணத்தினால் அவர் ஒரு தேசியக் கவி கிடையாது. பாரதியார் ஒரு மாநிலத்தில் பிறந்து ஒரே ஒரு மொழியில் மட்டுமே எழுதினாலும் அவர் தேசியக் கவியாக கொண்டாடப்படுகிறார். இதனால் தான் மகாத்மா காந்தி தேசப்பிதாவாக ஆகி, அம்பேத்கர் தலித் தலைவராக சுருங்கி விட்டார். இப்படி தலித் விஷயங்கள் தலித்துகளாலேயே சுருக்கப்பட்டு விட்டது..."

போராட்ட எல்லைகள்!

"...நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்."

நேர்காணலை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.

நன்றி: கீற்று.காம்

Wednesday, May 7, 2008

பார்ப்பனர்கள், கிறிஸ்தவ முஸ்லிம்களுக்கிடையில் சிண்டு முடிய போடும் வேடங்கள்!

கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு பதிவுகளை தொடங்கி கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் சிண்டு முடியும் கேவலமான வேலையை செய்து கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் முகமூடியை முந்திய பதிவுகளில் கிழித்திருந்தோம்.

நமது பதிவுகள் பார்ப்பன முக்காடுகளுக்குள் புழுக்கத்தை உண்டு பண்ணியிருப்பதாக தெரிகிறது.

நாம் எடுத்துச் சொன்ன எந்த ஒரு உண்மையையும் மறுக்க முடியாத பார்ப்பனர்கள், முஸ்லிம்கள்தான் இந்த பதிவை எழுதுவதாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்கள்.

இவர்கள் குடுமியை மறைக்காமல் கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு எழுதினால் அதை முஸ்லிம்கள் மட்டும்தான் கண்டு பிடிக்க முடியுமா?

நாம் எடுத்துச் சொன்ன இந்த விடயங்களில் எதையாவது இந்த பார்ப்பனர்கள் மறுக்க முடியுமா?

கிச்சு நேசகுமாரை பேட்டி கண்டதாக எழுதிய இந்த வரிகளை மறுக்க முடியுமா?
ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill
இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!

நேசகுமாரின் தோற்றத்தை வர்ணித்து இவ்வளவு பில்ட்-அப் கொடுத்து "அப்பாடி. "நேசகுமார்" என்பவரைச் சந்தித்துவிட்டேன்!" என்று 'பெரிய சாதனை' நிகழ்த்தியதை மறுக்க முடியுமா?

கிச்சுவின் இந்தப் பதிவில் பின்னூட்டம் போட்ட நேசகுமார், "எஸ்.கே,
நான் டை அடிப்பதில்லை. வயது குறைவாகத் தெரிவதற்கு நாள் தவறாது செய்து வரும் நடைப்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவை தான் காரணம். மன அழுத்தம் இல்லாமலிருந்தால் நரை-திரை விழாது, இளமையாகத் தென்படுவோம்."
என்று எழுதியதை மறுக்க முடியுமா?

இவ்வளவும் எழுதிய பின்னர், "உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. "நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை. நேரில் கண்டதாக எழுதியது தவறு. சிறுபிள்ளைத்தனமான செயல்." என்பதாக 'பல்டி' அடித்ததை மறுக்க முடியுமா?

கிச்சு நேசகுமாரை நேரில் கண்டதாக சொன்னது பொய் என்றால், கிச்சுவின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த நேசகுமாரும் அப்பொழுதே அந்தப் பொய்யை சுட்டிக் காட்டாமல், அந்தப் பொய்யுடனேயே ஒத்து ஊதியதைத்தான் மறுக்க முடியுமா?

கிச்சு சொன்னது பொய் என்றால் நேசகுமார் சொன்னதும் பொய்தானே? இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பொய்யர்கள்தானே?

இவர்களின் பொய்கள் இன்னும் முடிந்து விடவில்லை!

கிச்சு நேசகுமாரை பார்க்கவேயில்லை என்பதை நேசகுமார் மறுக்கிறார் பாருங்கள்?

நேசகுமாரின் பதிவு ஒன்றில் அவர் எழுதுகிறார், "சமீபத்தில் மீண்டும் SK அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த கேள்வியைக் கேட்டார், சரித்திரம் குறித்தது அந்தக் கேள்வி. 'அது எப்படிஅவர்கள் வீரத்துடன் போரிடுகின்றார்கள், நாம் அடிவாங்கிபின்வாங்கிவிட்டோம்' என்று கேட்டார்."

இந்த SK-தான் அந்த கிச்சு என்பதையும் மறுக்க முடியுமா?

இந்தப் பொய்யர் கும்பலின் கூட்டு களவாணித்தனத்தைத்தான் நாம் நமது பதிவுகளில் தோலுறித்து வருகிறோம்.

'இவன் முஸ்லிம்' 'அவன் முல்லா' என்று லேபிள் குத்துவதற்கு பதிலாக நாம் சொல்வதில் எதையாவது இவர்களால் மறுக்கட்டும்!

இன்னும் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது!

ஆகவே பார்ப்பனர்களே, இந்த சிண்டு முடியுற வேலையை விட்டுட்டு, வேற வேலை இருந்தால் பாருங்கள்.. என்ன?