Tuesday, February 26, 2008

இந்து மதத்திற்கு மாறினார்களாம் முஸ்லிம் இளைஞர்கள்! ஹய்யோ... ஹய்யோ!

பழநியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இரண்டு பேர் இந்து மதத்திற்கு மாறினார்களாம். பழநி திருநகரைச் சேர்ந்த ராசி முகம்மது மற்றும் நாசர் ஹசன் தான் அவர்கள்.

இவர்களுக்கு இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டதால் கோவில்களுக்கு சென்று வந்துள்ளனராம். தாங்கள் மதம் மாற வேண்டும் என்ற விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பை சேர்ந்தவர்களிடம் கூறினார்களாம். அதனால் இந்து மதத்திற்கு மாறுவதற்கான முறையான சடங்கு நடத்தி ராசி முகம்மது என்ற பெயரை ராஜீவ்குமார் என்றும் நாசர்ஹசன் என்ற பெயரை சஞ்சய் எனவும் மாற்றிக் கொண்டார்களாம்.

இந்த செய்தியை படித்து விட்டு, குறிப்பாக இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டது என்பதை படித்து விட்டு நமது நண்பர் ஒருவர் லாட்சில் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

மதம் மாறியவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொண்டார்களாம்?

அப்படியே அக்ரஹாரத்துல ஒரு அக்காமடேஷன் போட்டுக் கொடுத்து ஆளுக்கொரு இந்து பார்ப்பன பெண்ணையும் கண்ணாலம் பண்ணி வச்சாங்கன்னா இன்னும் இதப்போல நிறைய இசுலாமிய கிருஸ்துவ இளைஞர்களுக்கு வலை வீசலாமே?

http://www.dinamalar.com/2008FEB26/events_tn9.asp

2 தாலி கட்டிக் கொண்ட பெண் வெட்டப்பட்டார். அப்படின்னா 5 தாலி கட்டின பாஞ்சாலிக்கு என்ன தண்டனை?

கழுத்தில் 2 தாலியுடன் வாழ்ந்த தங்கையை `அவமானம் தாங்காமல் கொன்ற' அண்ணன் காவல் துறையினரிடம் சிக்கினார். பாவம்.. அந்தப் பெண் பார்ப்பன பெண்ணாக இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? பார்ப்பன புராணக்கதையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மனைவியாக இருந்த பாஞ்சாலியை முன்னுதாரணமாக எடுத்து தான் 2 தாலி மட்டுமே கட்டிக் கொண்டதாக சொல்லி தப்பித்திருக்கலாமே!


தஞ்சை, பிப்.26-
`கழுத்தில் 2 தாலியுடன் வாழ்ந்ததால் அவமானம் தாங்காமல் தங்கையை கொலை செய்தேன்' என்று, கைது செய்யப்பட்ட சகோதரர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

படுகொலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சரகம் தோகூர் காமாட்சி அம்மன் கோவில் அருகே உமாராணி (வயது 35) என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் தஞ்சை வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்.உமாராணியின் கணவர் சாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர், சென்னையில் பொதுப்பணித்துறை என்ஜினீயராக பணிபுரிந்தவர். கணவர் இறந்த பின்னர் உமாராணி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் லலிதா, சரிதா, மாமா ராஜா ஆகியோருடன் காரில் திருச்சி வந்தபோது கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அண்ணன் கைது

உமாராணியின் கணவர் சாமிநாதன் ஆரணியில் வேலைபார்த்தார். அவர் இறந்த பின்னர் தன்னுடைய குழந்தைகள் சுஷ்மிதா (11), சுபலட்சுமி (7) ஆகிய 2 பேரையும் உமாராணி சென்னையில் உள்ள சமூக சேவை இல்லத்தில் சேர்த்து தானும் சமூக சேவையில் ஈடுபட்டார். அவரை கொலை செய்ததாக, அவருடைய சொந்த சகோதரர்களான ராதாகிருஷ்ணன், சரவணன் உள்பட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.இவர்களில் உமாராணியின் அண்ணன் சரவணன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது சரவணன் கூறியதாவது:-

கள்ளத்தொடர்பு

"எனது சகோதரி உமாராணியை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயர் சாமிநாதனுக்கு திருமணம் செய்து வைத்தோம். அவர்களுக்கு சுஷ்மிதா, சுபலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.உமாராணிக்கு வேறு ஒரு நபரிடம் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அவரிடம் உமாராணி தாலி கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.இதனால் மனமுடைந்த கணவர் சாமிநாதன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இறந்தார்.

உமாராணியின் கழுத்தில் இரண்டு தாலி இருந்த விவரம், கணவன் சாமிநாதனின் இறுதிச் சடங்கின் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.இதனை நாங்கள் கண்டித்தோம். ஆனால் உமாராணி கேட்கவில்லை.

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி உமாராணி இங்கு வந்தது பற்றி, அவருடன் காரில் வந்த அவருடைய மாமாவான ராஜாவே எங்களிடம் கூறினார். அதன் அடிப்படையில் நாங்கள் பின்தொடர்ந்து வந்து, உமாராணியை வெட்டிக் கொலை செய்தோம்.இவ்வாறு சரவணன் வாக்குமூலத்தில் கூறினார்.

மேலும் ஒருவர் கைது

சரவணன் கொடுத்த வாக்குமூலத்தின் படி, கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.தொடர்ந்து விசாரணை நடத்தியதில் உமாராணியுடன் காரில் வந்த அவருடைய மாமா ராஜா (32) உமாராணியின் நடவடிக்கைகளை சரவணனிடம் அறிவித்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து ராஜாவையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் கொலையில் தொடர்புடைய உமாராணியின் மற்றொரு சகோதரர் ராதாகிருஷ்ணன் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

http://dailythanthi.com/article.asp?NewsID=396034&disdate=2/26/2008

Sunday, February 24, 2008

தீண்டத்தகாதவர்கள் சொர்க்கம் செல்வது எப்படி?

மனிதர்களை நான்கு வருணமாக பிரித்தது போதாமல், நான்காவது வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியையும் மனுசாஸ்திரம் குறிப்பிடுகிறது.

தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)
இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50)

சண்டாளர்கள் எனப்படும் இந்தப் பிரிவினருக்கு மிகவும் இழிவான கட்டுப்பாடுகளையும் மனுசாஸ்திரம் விதிக்கிறது.

''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)

''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).

''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53).

''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55).

''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56).

இந்த மக்கள் சொர்க்கம் போவதற்கு என்ன வழி? அதையும் மனுசாஸ்திரம் சொல்லுகிறது.

''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).

இங்கே கூட 'கூலி இல்லாம உயிர்த்தியாகம் செய்' என்று சொல்றாம்பாருங்க, அங்கேதான் நிற்கிறான் பார்ப்பான்.

நன்றி: ஆலமரம்

http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_28.html

மத்தவங்களுக்கு உயிர், பார்ப்பனென்றால் ம**! இதுதான் மனுதர்மம்!

தவறு செய்யும் பார்ப்பனர்களுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று மனு சாஸ்திரம் சொல்வதை பாருங்கள்!



'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).



மத்தவங்கனா உயிரை எடுக்கணுமாம். பார்ப்பனென்றால் மயிரை எடுத்தால் போதுமாம்!



எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).


ஊரை விட்டு துரத்துனாகூட பொருளோட துரத்துனுமாம்!




பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

இதைச் சொல்லியே அந்தகால மன்னர்களையெல்லாம் ப்ரெய்ன்வாஷ் பண்ணியிருக்கார்கள் பார்ப்பனர்கள்.

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)

பார்ப்பான் பக்கத்துல உட்கார்ந்ததுக்கே மற்றவர்களை ஊரை விட்டு விரட்டுனுமாம். ஆனா பார்ப்பான் இன்னொருத்தனை கொலை பண்ணுனாகூட அதிகபட்சமா அவனை ஊரை விட்டு துரத்துரதுதான் தண்டனை! அதுவும் பொருளோட!


அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)

இதுதான் நோகாம நொங்கு திங்குறது! நாலாம் வருணத்தாரெல்லாம் பார்ப்பனர்களின் ஏவலுக்காகவே உள்ளவர்களாம்! இதெல்லாம் உங்களுக்கே டூமச்சா தெரியலையா?

Saturday, February 23, 2008

பார்ப்பனர் மேலானவர் என்று மனுசாஸ்திரம் சொல்லுதே..என்னப்ப அடையாளம்?

"மனுசாஸ்திரமா? அதையெல்லாம் இந்தக் காலத்துல யாருண்ணா ஃபாலோ பண்றா?" என்பார்கள் இந்தக் கால பிராமணர்கள். ஆனால் உண்மையில் இவர்களின் பார்ப்பன தர்மத்தின் அடிப்படை மனுசாஸ்திரத்தில்தான் இருக்கிறது.

''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31). என்கிறது மனுசாஸ்திரம்.

பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்ரியவர்களாம் பிராமணர்கள். இப்படி சொல்கிரது மனுசாஸ்திரம். ஏன் முகம்? மற்ற பகுதிகள் என்ன பாவம் பண்ணியது? முகத்தில் தோன்றிய பார்ப்பனர்களுக்கு என்ன சிறப்பு? அதற்கும் மனுசாச்திரமே பதில் சொல்கிறது.

''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).

கடவுள் உண்மையிலேயே பார்ப்பனரை மேலானவர்களாக படைக்க நினைத்திருந்தால், அவர்களுக்கு மூன்று கண்களையோ, நான்கு கால்களையோ, அல்லது காவி கலர் ரத்தத்தையோ கொடுத்து ஒரு தனியான பிறவியாக படைத்திருக்கலாம்தானே? அப்படி இல்லாதப்போ, அவர்களும் மற்ற எல்லா மனிதர்களையும் போல படைக்கப் பட்டிருப்பதால், பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்று எப்படி நம்புவது? மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்குறப்போ, நான் மட்டும் மேலானவன் என்று சொல்கிறாயே, என்னப்பா அடையாளம்?