Showing posts with label பார்ப்பன வேதம். Show all posts
Showing posts with label பார்ப்பன வேதம். Show all posts

Monday, May 5, 2008

இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் - 4

இன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது.

இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல.

இராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய ("வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்."), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.

வரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை.

இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளைக் களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான்.

இராவணன் பெண்ணைத் தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும்.

இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.

நன்றி: http://www.tamilcircle.net/

Thursday, March 27, 2008

டெல்லி நீதிமன்றத்தில் ஒலிக்கும் மனுசாஸ்திரத்தின் குரல்!

பாப்பான் கொலை செய்தாலும் அவன் தேசத்தின் சொத்தாம்!

1999 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர் ஷிவானி பட்நாகர் அவரது டெல்லி இல்லத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் போன்ற பெரும்புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது.

நான்கு வருடங்கள் கழித்து 2003 ம் ஆண்டில் ஹரியானாவின் முன்னாள் சிறைத்துறை ஐ. ஜி ரவி காந்த் ஷர்மா, ஸ்ரீ பகவான், சத்யா பிரகாஷ், பிரதீப், வேத் ஷர்மா, மற்றும் வேத் (எ) காலு ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை), 120-B (கிரிமினல் சதி), 201 (சாட்சியங்களை அழித்தல்) , 401 (சமூக விரோதிகள் தொடர்பு), 403 ( வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆறு வருட நீதி விசாரணைக்கு பிறகு நேற்று ( மார்ச் 24, 2008) குற்றவாளிகளான ரவி காந்த் ஷர்மா, ஸ்ரீ பகவான், சத்யா பிரகாஷ், பிரதீப் ஷர்மா ஆகியோர்க்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சாஸ்திரி தீர்ப்பளித்திருக்கிறார்.

மரணதண்டனையை எதிர்ப்பவன் என்கிற அடிப்படையில் ஆர்.கே ஷர்மாவிற்கு மரணதண்டனை அளிக்கப்படாததை நான் வரவேற்கிறேன். ஆனால் அவருக்கு மரணதண்டனை அளிக்கப் படாததற்கு நீதிபதி சாஸ்திரி சொன்ன காரணம்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அத்தீர்ப்பில் "மக்கள் பிரநிதிகளால் இயற்றப்பட்ட சட்ட வரைமுறைகளுக்கு இந்த நீதிமன்றம் கட்டுப்படுகிறது. சட்டப்படி இக்குற்றத்திற்கு என்ன குறைந்தபட்ச தண்டனை அளிக்க முடியுமோ அதை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்த நீதிமன்றம் இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. ( சட்டம் மட்டும் குறுக்கே வராவிட்டால் வர்ணாசிரம கோட்பாடுகளின்படி "பிராமணன் கொலை செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் போதும்" என்று தீர்ப்பளித்திருப்பார் நீதிபதி திரு சாஸ்திரி).

மேலும் இந்த கொலைக்குற்றத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ரவி காந்த் ஷர்மா இந்திய தேசத்திற்கு ஒரு பெரும் சொத்தாக ( " except for the crime in question, Sharma was an asset to this nation") இருந்தார் என நீதிபதி சாஸ்திரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கர்ப்பிணி பெண்ணை (அவள் உத்தமியா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்) கொலை செய்தவன் தேசத்தின் சொத்தாக சித்தரிக்கப்படுவது, குற்றவாளி மற்றும் நீதிபதி இருவருமே பார்ப்பனராக இருந்ததால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவில் வர்ணாசிரமம் இன்னும் ஒழிக்கப்படவில்லை.

நன்றி: http://lemuriyan.blogspot.com/2008/03/blog-post_24.html

தவறு செய்யும் பார்ப்பனர்களுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று மனு சாஸ்திரம் சொல்வதை பாருங்கள்!

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

இப்படியெல்லாம் மனுசாஸ்திரத்துலே சொல்லி இருக்கறச்சே, நீதிபதி சாஸ்திரி எப்படிங்காணும் ஷர்மாவுக்கு மரண தண்டனை கொடுப்பார்?

Monday, March 24, 2008

பெண்ணின் உடலைச் சிதைக்கும் இராமாயண நீதி!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 3

ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது.

பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.

காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது.

இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.

வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை" என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.

மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.." என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்.

இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."

இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான். கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.

நன்றி: http://www.tamilcircle.net/

Friday, March 21, 2008

கணவன் மனைவியான அண்ணன் தங்கை!

ஜெர்மானியரான பாட்ரிக் ஸ்டூபிங் தனது தங்கையான சூஸனை காதலித்து மணமுடித்து 4 குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார். ஜெர்மானிய சட்டப்படி இது குற்றம் என்பதால் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பாட்ரிக், தாங்கள் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.



அவரது தங்கை-மனைவி சூஸனிடம் 'இந்தச் செயல் தவறு என்று நீங்கள் உணரவில்லையா?' என்று கேட்டபோது 'இல்லை' என்று அவர் தலையாட்டி மறுத்தார். 'நாங்கள் சேர்ந்து வாழவே விரும்புகிறோம்' என்று அவர் தெரிவித்தார்.



இந்த பதிவுக்கு தொடர்பில்லாத இன்னொரு தகவல்: ஜெர்மானியரும் பார்ப்பனரும் ஒரே ரத்தம்!



A German brother and sister are challenging the law against incest so that they can continue their relationship free from the threat of imprisonment.
Patrick Stübing, an unemployed locksmith, and his sister Susan have had four children together since starting a sexual relationship in 2000. Three of the children are in foster care, and two have unspecified disabilities.
The couple, who live near Leipzig, grew up separately and only met many years later. Their supporters say they will fight until incest is no longer regarded as a criminal offence, arguing that the law is out of date. They say it harks back to the racial hygiene laws of the Third Reich and should be overturned in favour of freedom of choice and sexual determination. Detractors insist that incest should remain a social taboo, largely because of the risks linked to inbreeding and the imbalance in social relations it inevitably causes.
A film and a book are planned about the Stübings, who remain defiant about breaking one of the few remaining sexual taboos in western society.
Mr Stübing, 30, has spent over two years behind bars for having sex with his sister and faces another prison sentence if paragraph 173 of the legal code is not overturned. His sister has never been imprisoned because she has always been tried as an adolescent.
The couple were born into the same family but Patrick was already living apart from his mother when his sister was born. After a life spent in children's homes, Mr Stübing was reunited with his mother, Annemarie, in Leipzig in 2000, when he met his sister for the first time. Six months after the reunion, their mother died of a heart attack.
The siblings fell in love, and their son Eric was born in 2002, followed by Sarah, now 4, Nancy, 3, and Sofia, 1. Two of the children are known to have disabilities, although it is not known whether they are a result of inbreeding, or because they were born prematurely. All the children except Sofia have been taken into foster care. Mr Stübing has since been sterilised.
Speaking to a German newspaper, Mr Stübing said the couple decided to have more children after the authorities took their first-born away. "The younger children might not have been born had they not taken the first one from us," he said. "We just want to make sure that we don't lose everything again."
Ms Stübing shook her head when asked if the couple felt guilty about their relationship. "No," she said. "I just want us to be able to live together."
Addressing the issue of two of the children's disabilities, Mr Stübing would only say: "It's true that Eric has epilepsy, but otherwise everything's fine with him."
"Our aim is to get paragraph 173 abolished," Ms Stübing said. "And I would like to have my children back again."
Germany's courts have not doubted the earnest nature of the relationship. But in German law sex with a close relative is forbidden and punishable by up to three years in prison.
Endrik Wilhelm, the couple's lawyer, said they had little choice but to fight the existing law. "It's clear, if you face jail, and the only way you can prevent this is by overturning the law, that's what you will try to do," he told the Guardian.
He said that the couple were causing no harm to others. "Everyone should be able to do what he wants as long as it doesn't harm others."
Incest is not illegal in many of Germany's neighboursing countries, he said. The law was a "historical relic".
Napoleon abolished France's incest laws in 1810. Neither is it a crime in the Netherlands, Luxembourg, Belgium, Portugal or Turkey. Japan, Argentina and Brazil have also legalised it in recent years.
Incest is forbidden in Britain, where the law was extended in 2002 to include not just those with blood ties, but also step-parents and their children and in cases of adoptions.
But opponents of changing the law say it exists for a good purpose.
"When siblings have a child together, there is only a 50% chance that it will be healthy when it is born," said Jürgen Kunze, professor of human genetics at Berlin's Charite hospital.
Germany's constitutional court is expected to decide on the Stübings' appeal in four to six weeks' time.

http://www.guardian.co.uk/world/2007/feb/27/germany.kateconnolly

புராணங்கள் உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 2

இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.

உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்"

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.

இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"

தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.

நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்.

இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான்.

நன்றி: http://www.tamilcircle.net/

Thursday, March 20, 2008

நடிகர் பார்த்திபனை ஏமாற்றிய சாமியார்!

``சார், சென்னைப் புறநகர்ல தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்தீங்கன்னா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும். நிறைய மினிஸ்ட்டருங்க அவரைப் பார்த்துட்டுப் போறாங்க. ரொம்ப பவர்ஃபுல்.’’``

ஏற்கெனவே பவர்ல இருக் கிற மினிஸ்ட்டருங்க எதுக்கு அவரைப் போய் பார்க்கணும்?’’நான் கிண்டலடிக்க,``இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒரே ஒரு தடவை நீங்களும், அண்ணியும் வந்து பாருங்களேன்.’’

சம்மதிப்பதற்கான சமாதானங்கள் தொலைக்காட்சி சீரியலாக நீள, அந்தப் புறநகர் சாமியார் இடத்தில் `ஸாரி’ மடத்தில் நாங்கள் பணிவாய்க் காத்திருந்தோம்.

வரும் முன் பார்ப்போம் என அந்த அறையை என் கண்கள் வட்டமிட்டதில், ஒரு சாமிப் படமும் அங்கு இல்லை. எல்லாம் அந்த சாமியார் படங்களாகவே இருந்ததில் என் புருவங்கள் இரண்டும் கேள்விக்குறியாக வளைந்தன.

ஒரு திரைப்படப் புகைப் படக் கலைஞரின் அதி அழகியல் நுட்பத்துடன் ஒவ்வொரு ஃப்ரேமும் இருந்தது.அவரது கண்கள் மட்டும், ஒரு `8’ போல் விரல்கள் பிணைந்திருக்கும் இரு கைகள் மட்டும், காவி வேட்டிக்குள் இருந்து எட்டிப் பார்க்கும், இரண்டு கால்கள் மட்டும், புறமுதுகிட்டு அவர் அமர்ந்திருப்பது மட்டும், கடைசியாக அவரது முழு உருவம்.எல்லாப் படங்களிலும் மலை மலையாக உதிரிப் பூக்கள் ஒட்டப்பட்டிருந்தன. தன்னைத்தானே சாமியாக வணங்கும் ஒரு சாமியாரைப் பார்ப்பது வியப்பாக மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

ஒரு தெலுங்குப் பட வில்லனின் வாசனை அந்த அறைக்குள் முதலில் நுழைந்தது. பிறகு அவர் வந்தார். ஆஜானுபாகுவாக இருந்த அவர், மைசூர் பாகுவாக இனிமையாகப் பேசினார். கேசரிப் பவுடர் போட்டுக் கிண்டியதைப் போல கண்கள் இளம் சிவப்பில் மிதந்தன.

அதை மூடி வைத்து ஒரு வேக்காட்டுக்குப் பின் திறந்த படி, ``சொல்லுங்க’’ என்றார்.`சொல்’வதற்குள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு யாரோ செய்வினை பண்ணியிருக்காங்க.’’

அதிர்ச்சி எங்களை ஆட்கொண்டது.``உங்க வீட்லயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துட்டு வாங்க. யார் செஞ்சதுன்னு சரியா சொல்லித்தரேன்.’’

அவர் பேச்சில் ஏதோ பிடிப்பு ஏற்பட, பிடி மண்ணுடன் மீண்டும் ஆஜரானோம். அந்த மண்ணைத் தன் உள்ளங்கையில் வைத்து, கண்ணை மூடிப் பார்த்தவர், சில நொடிகளுக்குள் `ஷாக்’ அடித்தவர் போல கை உதற, மண் சிதறியது. எங்கள் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தவர், ஒரு மாதிரியாகவும் சிரித்தார்.

``நெறைய வெச்சிருக்காங்க. தொழில் நாசமாக கெட்ட காரியம் பண்ணியிருக்காங்க.’’

நாங்கள் இருவரும் புதிருக்குள் விழுந்தோம்.``யார் செஞ்சிருப்பாங்க...? ஏன் செஞ்சிருப்பாங்க...?’’

``எடுக்கலாம். ஆனா, பொதுவா நான் யார் வீட்டுக்கும் போகாது’’ என்று கூறியபடி கோழியாகி அந்த மண்ணையே கிளறிக் கொண் டிருந்தார்.நாங்கள் கிட்டத்தட்ட கெஞ்சிய பிறகு, ஒப்புக்கொண்டார், எங்கள் வீட்டின் விஜயத்துக்கு.அப்படி அவர் வருவதானால், நாங்கள் என்னவெல்லாம் வாங்கி வைக்கவேண்டும் என்று அவரே ஒரு `லிஸ்ட்’ எழுதிக் கொடுத்தார்.அந்த அனுமார் வாலைச் சுருட்டி, பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, வேகமாக வெளியேறினோம். ஆனால், எங்கள் மனக்கடல் உள்வாங்கியது வருத்தத்தில்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும் வரை எங்கள் கண்களும் கேசரி பவுடரைப் போட்டுக் கிண்டியதைப்போல சிவந்தே இருந்தது உறக்கமின்மையால்.

வந்தார். ``எல்லாம் ரெடியா?’’ என்றார். வழக்கமான பூஜை பொருள்களுடன் மூன்று நிறங்களில் மூன்று சாத உருண்டைகளை உருட்டி வைத்திருந்ததைக் காட்டினோம். அந்தக் குறிப்பிட்ட பூஜைக்காக குறிப்பிட்ட கறை போட்ட வேட்டியையும் வாங்கி வைத்திருந்தோம்.

காட்டிய வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார். நுழையும் முன், ``அந்த கார்டன்ல மூணு அடிக்கு ஒரு குழியத் தோண்டி வைங்க. வேலைக்காரங்க வேணாம். நீங்களே தோண்டுங்க’’ என்று சொல்லிவிட்டு அந்த மூன்று சாத உருண்டைகள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

முப்பது நிமிடம் கழித்து வெளியே வந்தார்.எனக்கு நானே குழியைப் பறித்துவிட்டு, (அதாவது தனியனாக) நின்று கொண்டிருந்த என்னிடம் அந்தச் சாத உருண்டைத் தட்டை நீட்டி குழியில் போடச் சொன்னார். அதில் தீர்த்தம் ஊற்றி மண்ணை மூடி, சூடம் காட்டி, ``சூ.... மந்திரக்காளி’’ சொல்லி சற்று கழித்து என்னிடம் அந்தக் குழிக்குள் கையை விட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னார்.

சற்று நேரம் தேடிய பின், அந்த புதைபொருள் ஆராய்ச்சியில் புதைந்திருக்கும் பொருள் தெரியாமல், அண்ணாந்து அவரைப்பார்த்தேன்.`இன்னும்’ என அவர் இமை சுருங்கி விரிந்தது. இன்னும், இன்னும் தேட விரல் இடுக்கில் ஏதோ தகடுபோல் தட்டுப்பட்டது. வெளியில் எடுத்து அவரிடம் நீட்டினேன். அவரும் பழிக்குப் பழியாகத் தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தை என்னிடம் நீட்டினார்.அதில் போட்டு விட்டு, இன்னும் தேடி, இன்னும் இன்னும் போட்டேன். பாத்திரம் நிறைய செம்புத் தகடுகள் புழுவாய் நெளிந்தன.

ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் துடைத்து விட்டு என்னை அதைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.`உன் சினிமா தொழில் சின்னாபின்னமாக’, `நீ நாசமாகப் போக’, `உன் புள்ளைங்க உருப்படாமல் போக’, நீ ஜன்னி வந்து சாக’, உன் பொண்டாட்டி புள்ளைங்க அழிஞ்சு போக...’

இப்போது இதை எழுதும் போதே என் கைகள் நடுங்குகிறது என்றால், அதை வாசித்த போது என் மனம் என்னவாய் வெடித்திருக்கும்!

துடித்தபடி நானும் என் மனைவியும் கேட்டோம். ``யாருங்க...? யாருங்க..? யாருங்க எங்களுக்கு இப்படி செஞ்சிருப்பாங்க?’’

அமைதியாக எழுந்தவர், எங்கள் தலைமீது அவரின் கையை வைத்து (ஏற்கெனவே நாங்கள் தலையில் கை வைத்த படிதான் அமர்ந்திருந்தோம்.``எல்லா செய்வினையையும் நான்தான் எடுத்திட்டேன்ல.... அப்புறம் ஏன் கவலைப்படு றீங்க? இனிமே நீங்க நல்லா இருப்பீங்க!’’ எனக் கூறிவிட்டு ஒரு வேப்பிலை மரமாய் வெளியேறினார்.

என் மனைவியின் அழுகையின் பின்னணியில் நான் மீண்டும் மீண்டும் அந்தத் தகடுகளைப் படித்தபடி, படிக்காமல் வெறித்தபடி இருந்தேன்.யாராக இருக்கும்? இவ்வளவு வன்முறையான வார்த்தைகள் வர எது ஏதுவாக இருந்திருக்கும் என்று என் மண்டைக்குள் ஜல்லடை போட்டேன்.

முதலில் இந்தக் கையெழுத்து யாருடையது?எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம்... அதுவும் சமீபமாக...சலித்த பிறகு ஜல்லடையில், ஒரே மாதிரியான சுழித்தல் உள்ள நான்கைந்து எழுத்துகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

திடீரெனத் தலையில் தேங்காய் அடித்து உடைத்தது போல் ஒரு அனுமார் வால் பேப்பர்.சாமியார் எழுதிக் கொடுத்த, அந்த `லிஸ்ட்’ பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் கண்கள் மின்னின. அந்தத் தகடுகளையும், பேப்பரையும் ஒப்பிட்டேன். என் மனைவியைக் கூப்பிட்டேன்.

``ஆமா! ரெண்டு கையெழுத்தும் ஒரே மாதிரிதான் இருக்கு!’’

வலமிருந்து இடமாக பூமிப் பந்து சுழல்வதை எங்கள் தலைச் சுற்றலால் கவனிக்க முடியவில்லை.பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதிபுத்திசாலித்தனம், செம்புத் தகடுகளாய் மாறி, சாத உருண்டைக்குள் நுழைந்து பூமிக்குள் புதைந்து மீண்டும் எங்கள் கைகளில்.

இதை நான் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சாமியாரின் மந்திர சக்தியால் இனி எங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற அளவில் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம்.

அதிபுத்திசாலித்தனம், ஆபத்துகளை விளைவிக்க ஆயத்தமாக, ஆயுதமாக ஆகிவிடுமோ...?

சாமியார் சென்ற திசையைப் பார்த்தோம். தி.நகர் சென்று விட்ட அவருடைய கார் கிளப்பிய புழுதியில் புழுக்கமும், வேதனையும் பரவி, விரவி வியாபித்திருந்தது.

நன்றி: `கல்கி’, 10.6.2007
http://viduthalai.com/20070605/news11.htm

Wednesday, March 19, 2008

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 1

இந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது.

இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

இப்படிப்பட்ட வக்கிரங்கள் தான், இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் - பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும்;, முன்வைக்கும் அனைத்துக்கும் முன்னோடியாக இந்து மதத்தின் வக்கரித்த உறவுகள் உள்ளன.

இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்து மதம் முன்வைத்தது என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்தியப் பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும்.

பார்ப்பனச் சனாதனத் தர்மமாக மனுசாஸ்திரத்தின்படி வர்ண, சாதி வகையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவிப்பதாகக் கூறிய புத்த மதம் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குப் பெற்றது. அதனால் பார்ப்பன சனாதன மதம் அழிந்து போகும் நிலையை எட்டி பல ஆண்டுகளாகத் தலையெடுக்க முடியாமல் கிடந்தது.

இந்நிலையில் காலடியில் தோன்றிய ஆதிசங்கரன் காசிவரை பயணம் செய்து அத்வைதத்தைப் பரப்பினார். வர்ண, சாதி வதையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை மீண்டும் பார்ப்பன மதத்துக்குள் ஈர்ப்பதற்காகச் சிறுதெய்வங்களை எல்லாம் பெருந்தெய்வங்களின் அவதாரங்கள் என உறவுபடுத்தும் மதக்கோட்பாடுகளை உருவாக்கினார். அதாவது குல, கண தெய்வங்கள் எல்லாம் புராண, இதிகாசக் கடவுள்களுடன் உறவுபடுத்தி புனைவுகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பன மதத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்.

இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப் பட்டபோது, சிறுவழிபாடுகள் சீரழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டுக் கடவுள்கள் ஏன், எதற்காக, எந்த உற்பத்தி மீது உருவாயின என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்தச் சிறுகடவுள்களைப் புணர்ந்தும், வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தும் உறவாக்கிக் குடும்பத்தில் இணைத்ததன் மூலம், அவற்றோடு இந்துமதம் சார்ந்த உறவுகள் அங்கீகாரம் பெற்றன. அவற்றின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.

நன்றி: http://www.tamilcircle.net/

Tuesday, March 18, 2008

இதுக்கு என்னாங்கோ பரிகாரம்?

இரவு முழுவதும் கோவில் கருவறைக்குள் காதலியுடன் இருந்த பூசாரி; விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்

திருவனந்தபுரம், மார்ச். 8-

கேரளா மாநிலம் பத்தனம் திட்டையை சேர்ந்தவர் சுபாஷ் நம்பூதிரி. (வயது 41). இவர் கோன்னி அருகே வள்ளிகோடு பகவதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார்.

கோவிலுக்கு அருகே அஞ்சலி என்ற பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். பூசாரி சுபாஷ் நம்பூதிரி கோவிலுக்கு வரும் போதெல்லாம் இவரை பார்ப்பார். கண்களால் பேசிக்கொண்ட அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கோவிலில் வழிபாடுகள் இல்லாத நேரத்தில் சுபாஷூம் அஞ்சலியும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இதற்கு கோவிலின் மறைவான இடங்களை பயன்படுத்தி கொண்டனர்.

பூசாரி சுபாஷ்-அஞ்சலி இடையேயான காதல் விவகாரம் மெல்ல மெல்ல ஊருக்கு தெரிந்து பெற்றோர் காதுக்கும் எட்டியது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். மேலும் அஞ்சலியை கோவிலுக்கு செல்லக்கூடாது. பூசாரியை சந்திக்கக்கூடாது என்றும் சத்தம் போட்டனர்.

இதனால் தவித்துப்போன காதல் ஜோடி திடீரென ஊரை விட்டு மாயமானது. அதிர்ந்து போன பெற்றோர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி பெங்களூருக்கு சென்றது தெரிய வந்தது. எனவே போலீசார் பெங்களூர் சென்று அவர்களை கண்டு பிடித்து அழைத்து வரமுடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கோவில் ஊழி யர்கள் கோவிலை திறந்தனர். பின்னர் சன்னிதானத்துக்குள் சென்று கருவறையையும் திறந்தனர். அப்போது கருவறைக்குள் பூசாரி சுபாஷூம் அவரது காதலி அஞ்சலியும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தப்படி மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த காதல் ஜோடியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் பூசாரி சுபாஷூம் காதலி அஞ்சலியும் முந்தினநாள் இரவே பெங்களூரில் இருந்து ஊருக்கு வந்து விட்டதும், பின்பு அவர்கள் நைசாக கோவில் கருவறைக்குள் புகுந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

கருவறைக்குள் காதல் ஜோடி கட்டிப்பிடித்தப்படி கிடந்தது கோன்னி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=255173

======

ஐயப்பன் கோவிலுக்கு நடிகை சென்றால் தீட்டு.. சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடினால் தீட்டு.. என்கிறார்களே, இப்போ கோவில் கருவறைக்குள்ளேயே தீட்டு பட்டதற்கு என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள்?

Monday, March 17, 2008

கிருஷ்ணனின் மனைவி ருக்மணியின் சக்காளத்திகள்! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

இந்து மதம் என்றால் எத்தனை எத்தனையோ விமர்சனக் கணைகள் அதன்மீது!அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அடிமுட்டாள்தனத்தில் அதன் மாளிகை எழுந்திருக்கிறது. அதன் அங்குலம் அங்குலமான இடம் ஒவ்வொன்றுமே ஆபாசத்தில் திளைத்து, அநியாயத்துக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு இருக்கிறது.

விபச்சாரத்தைத் தொழிலாளக் கொண்டவர்கள் கூட அதனிடம் சலாம் வைத்து புறமுதுகிட்டு ஓடவேண்டும்.

ஒழுக்கம், அறப்பண்பு, நன்னடத்தை இவற்றை மக்களிடம் பரப்பிய கவுதமப் புத்தர் அவர் உருவாக்கிய அமைப்பு சீலங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கிட இந்து மதம் மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரப் படைப்பாகக் ``கிருஷ்ண அவதாரத்தை’’க் கற்பித்தது.

இது பற்றி என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகிறது.

``புத்த பிரான் அற மொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.

புத்தர் கொள்கைகளின் சொல் வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது’’ என்று மிகச் சரியாகக் கணித்தது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

இந்த வகையில் இன்றைய சின்னத்திரை, பெரிய திரை ஆபாச ஆலமரத்துக்கு விதையே இந்து மதத்தின் கிருஷ்ண அவதாரம்தான்.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்’’ என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை!

``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான்.கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளாம், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்’’ (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா? இந்தக் கடவுளிடத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்?

ஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை! எத்தனை!! அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது!

திருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி’’ என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி’யுள்ளார்.`கொக்கோகம்’ வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:

``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்புணர்வதோர் ஆசையினால் - என்கொங்கை கிளர்ந்து குமைத்துகுதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும்அங்குயிலே!’’

நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.

``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.

கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

மேலும் நாச்சியார் பாடுகின்றார்:

கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோராச் சோர்வேனைக்
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்து இளங்கொங்கை
விருப்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புங்குதற்கு எனப்
பரிவுடைமை செப்புமினே!

இந்தப் பாட்டடிகளின் அருவருப்பை ஒரு பெண் வெளிப்படையாக இப்படிப் பாடுவாளா என்பதை எண்ணிப் பாருங்கள். பாட்டடிகளின் கருத்து பின்வருமாறு அமைகின்றது.

கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன்.என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்-தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

எந்தக் கேடு கெட்ட பெண்ணும் தம் காம-வெறியை இப்படி வெளிப்படுத்துவாளா? சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும் தான் பக்தியும் பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!

கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
வெறிந்து என்னழலைத் தீர்வேனே!

என்றும் பாடுகிறார் ஆண்டாள்!

அந்தரங்கத்தில் கூட நடக்க முடியாத ஆபாசச் சேற்றை அள்ளி எறிகிறார் ஒரு பெண் பக்தை.

இந்து மதத்தின் கடவுள்கள் அவற்றின் தோற்றம் நடப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாம் காட்டு விலங்காண்டித்தனமான விரகதாபத்தின் வெளியீடுகளும் வழியல்களும்தான்.`ஓம்’ என்னும் தாரக மந்திரமானாலும் சரி, சிவலிங்கம் என்று சொல்லப்படுவதானாலும் சரி எல்லாமே ஆண் - பெண் புணர்ச்சிகளை மையப்படுத்தும் சமாச்சாரங்கள்தாம்.

கடவுளே மோகினி அவதாரம் எடுப்பது, அந்த மோகினியைக் கண்டு இன்னொரு முழு முதற்கடவுள் சபலப்படுவது - கூடுவது - பிள்ளையைப் பெறுவது என்கிற தன்மையில் இந்து மதம் என்ற குட்டை சேறும் சகதியுமாக, கும்பியும் நாற்றமுமாக மனித நாகரிகத்தில் மூக்கைத் துளைக்கிறது.ஒழுக்கத்தை ஒழித்து, மனிதனின் மலிவான உணர்வுகளைத் தூண்டி மீன் பிடிப்பது தான் இந்து மதத்தின் அணுகுமுறை.

கோயில் தேர்களிலும், கோபுரங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கும் ஆபாசத்தை முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏன் பார்க்கிறீர்கள் என்று இந்து முன்னணியினர் கேட்டது சமாதானமாகி விடுமா?பார்ப்பதற்காகத்தானே செதுக்கி வைத்துள்ளீர்கள்? கோயிலுக்கு மக்களை ஈர்ப்பதற்கு இந்தக் கேவலமான உபாயத்தைத்தானே கையாண்டிருக்கிறீர்கள். அதனைச் சுட்டிக்-காட்டினால் வெட்கப்படுவதற்குப் பதில் வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா?

இந்து மதத்தின் இதிகாசங்களும், புராணங்களும் கூட இதே கெதியில்தான் - சுருதியில்தான். மகாபாரதத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது வாசகர் ஒருவர் `ஹிந்து’ நாளேட்டில் எழுதிய (17.12.1988) ஒரு கடிதம் தான் நினைவிற்கு வருகிறது. சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயு புத்ரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு, தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள்.தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே, 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா?

அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்’ என்று அவர்களிடம் கூற முடியுமா?

நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஹிந்துவில் கடிதம் எழுதியவர் ஒன்றும் பெரியார் தொண்டரல்லர். கருஞ்சட்டை வீரருமல்லர் - பக்தர்தான் - அதுவும் `ஹிந்து’ ஏட்டில் எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்கவேண்டும். இந்துக்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

ஒருத்திக்கு ஒருவன் என்கிற உன்னத வாழ்வு தமிழர்களுக்கு உள்ளது.அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது ஆரியப் பார்ப்பனர்களுடையது.

ஆரியர்களின் கலாச்சார சின்னம் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வகைகள்! தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தைப் பொங்கல் நாள் என்னும் வேளாண்மை விழா - அவர்கள் வேறு - நாம் வேறு - வேறுபடுத்திப் பாருங்கள் - நம் வேரின் ஆழம் என்ன என்று தெரியும்!

http://unmaionline.com/20070102/20.htm

Saturday, March 8, 2008

தீட்சிதர்கள் யார்? நடராஜர் இடக்காலை தூக்கி ஆடுவதன் மர்மம் என்ன?

சைவக் குரவர்களால் சிலிர்த்துப் பாடப்பெற்ற ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவது பிரச்னையாகி அரசின் அதிரடி முயற்சியால் இப்போது நிலைமை சகஜமாகியிருக்கிறது.

'போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களையும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?' என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம்.

''வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம் வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால் இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.

இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டுமல்ல ஆவுடையார்கோயில் காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை. வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.

வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள் ஆடுகள் குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?
சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. ஆனால் வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர்.

லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில் 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.

அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய் 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.

நன்றி: ஆனந்த விகடன்