Monday, May 26, 2008

மரம் வெட்டினால் இந்து(த்துவா)க்களின் மனது புண்படும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சேதுக்கால்வாய் பகுதியில் ராமர் பாலம் இருந்தது என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை என்றும், நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்றும் இந்துத்துவ பாஜக-அதிமுக பரிவாரங்கள் கூக்குரலிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்துக் கருத்துச் சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி மநுதாரரிடம் "மரம் கூடத்தான் சிலரால் வணங்கப்படுகிறது. அதனை தெய்வம் என்றும்கூட நம்புகிறார்கள். அதற்காக இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதால் யாரும் மரம் வெட்டக்கூடாது என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டார். இப்படியே மதநம்பிக்கை தும்பிக்கை என்று சொல்லிக் கொண்டே கீழ்கண்டவற்றையும் தடுக்க வாய்ப்புள்ளது.

1) விநாயகரின் வாகனம் எலி என்பதால் யாரும் எலிகளைக் கொல்லக் கூடாது;
எலி மருந்து விற்பதையும் தடை செய்ய வேண்டும்.


2) விஷ்னுவின் வாகனம் பன்றி என்பதால் மூளைக்காய்ச்சல் பன்றியினால்
பரவும் என்று சொல்வதையும் தடை செய்ய வேண்டும்.


3) சிவனின் செல்லப்பிராணி பாம்பு; இனி யாரும் பாம்பை
அடிக்கக்கூடாது.



இப்படியாக கல்,மரம்,ஊர்வன,பறப்பன போக கம்பி எண்ணிய/ எண்ணப் போகும் பலரையும் தெய்வமாக நம்புவதால் அவர்களை சிறையில் அடைப்பதும், குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்வதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்பதால் சங்கரராமனைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக நடமாடும் தெய்வம் சங்கராச்சாரியாரை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்து மதநல்லிணக்கம் கெடாமல் காக்க வேண்டும்!

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்"
- பாரதியார்

2 comments:

சந்திப்பு said...

Fine. Excellent. Simple

puduvaisiva said...

விநாயகரின் வாகனம் எலி என்பதால் யாரும் எலிகளைக் கொல்லக் கூடாது;
எலி மருந்து விற்பதையும் தடை செய்ய வேண்டும்

:))))